பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் துறையூர்- பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்திற்கு அருகே தொப்புள்கொடி அறுக்கப்படாத நிலையில் பெண் குழந்தை இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தையை வீசி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.