திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புஷ்பத்தூர் பகுதியில் கேரளா நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இதேபோல தேங்காய் லோடு ஏற்றி கொண்டு சரக்கு வேன் உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக லாரியும், சரக்கு வேணும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களையும் அப்புறப்படுத்திய பிறகு அங்கு போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.