திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில்  வட்டார அளவில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு “சுற்றுச்சூழல் காப்போம்” என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் நீடாமங்கலம் வட்டாரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில்  200 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில்  வடகாரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவில்  தலைமை ஆசிரியர் மல்லிகா தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி மற்றும் பல்நோக்கு சேவை இயக்க செயலாளர் ஜெகதீஷ் பாபு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி மாணவர்களை வாழ்த்து பேசி உள்ளார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் உறுப்பினர் செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.