திருவாரூர் மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் அருகே நாடாக்குடி பகுதியில் மலர்க்கொடி(49) என்பவர் வசித்து வந்தார். இவர் சர்க்கரை நோய் வியாதி காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி தாங்க முடியாமல் சர்க்கரை வியாதிக்கு சாப்பிடக்கூடிய மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உள்ளார்.

இதனால் மயக்கமடைந்த அவரை  அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மலர்க்கொடி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.