தமிழில் பெயர் பலகைகளை வைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னையில் உள்ள கடைகளில் பெயர் பலகைகளை தமிழில் வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அதாவது தமிழை தேடி எனும் இயக்கத்தின் ஒரு பகுதியாக ராமதாஸ் தமிழ் மொழி மீட்டெடுப்பு தொடர்பான துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், தமிழ் மொழி தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. சென்னையில் உள்ள கடைகளில் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். இல்லையெனில் கருப்பு மை கொண்டு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.