கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல எனும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி இணையத்தில் எழுந்து உள்ளது. அந்த வகையில் இப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை டைரக்டு செய்த தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு சிம்புவின் அடுத்த படத்தை கமல் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.