நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையில் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வராக ரூபம்’ என்ற பாடல் காப்புரிமை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால்  இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படம் கன்னடத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் வரும் ‘வராக ரூபம்’ என்ற பாடல் கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ்ஜின் நவரசம் என்ற  பாடலை அப்படியே காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

காந்தாரா  

எனவே இதற்கு கேரளா கோழிக்கோடு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாய்க்குடம் பிரிஜ் இசைக்குழுவின் அனுமதி இல்லாமல் இந்த பாடலை எந்த தளங்களிலும் ஒளிபரப்ப கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஓடிடி தளத்தில் வராக ரூபம் பாடல் இடம்பெறாமல் காந்தாரா திரைப்படம் வெளியானது. பின்னர் இந்த பாடலுக்கான தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இப்படத்தின் கேரளா விநியோக உரிமையை பிருத்விராஜ் சுகுமாரன் பெற்றிருந்தனர். இவர்கள் மீது பதிப்புரிமை மீறல் தொடர்பான வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதை தற்போது கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.