நடிகர், நடிகைகள் ஓட்டல்களுக்கு போகும்போது ரகசியமாக படம் பிடித்து புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் பிரபல இந்தி நடிகை அலியா பட் வீட்டுக்குள் ஒரு அறையில் சாதாரண உடையில் இருந்த போது எதிர்வீட்டு மாடியிலிருந்து சிலர் கேமரா வாயிலாக ரகசிய புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அலியா பட் புகைப்படம் எடுத்தவர்களை கண்டித்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு ஆதரவாக நடிகர்-நடிகைகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அலியா பட்டின் கணவரும் இந்தி நடிகருமான ரன்பீர் கபூரும் இதை சாடியுள்ளார். அவர் கூறியதாவது “வீட்டுக்குள் இருந்த என் மனைவியை அவருக்கு தெரியாமல் போட்டோ எடுத்துள்ளனர். இச்செயல் கேவலமானது ஆகும். இதனால் அலியா பட்டின் தனியுரிமை பாதித்து இருக்கிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்க இருக்கிறேன்” என்று ரன்பீர் கபூர் கூறினார்.