ஒடிசா மாநிலத்தில் பிரபலமான நடிகை மற்றும் பாடகியாக வலம் வந்தவர் ருச்சிஸ்மிதா குரு. இவருடைய வீடானது போலாங்கீர் மாவட்டத்திலுள்ள தலபலிபடா பகுதியில் இருக்கிறது. சுடாபடா பகுதியிலுள்ள தன் மாமா வீட்டில் தங்கயிருந்து அவர் ஆல்பங்களில் நடித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாமா வீட்டின் அறை ஒன்றில் மின் விசிறியில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில், அவர் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிள்ளனர். இதுகுறித்து நடிகையின் தாயார் கூறியதாவது, இரவு உணவுக்கு ஆலூ பராத்தா தயார் செய்வதில் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. பின் அவளை இரவு 8 மணிக்கு ஆலூ பராத்தா தயாரிக்குமாறு கூறினேன். இருப்பினும் அவளோ இரவு 10 மணிக்கு சமைக்கிறேன் என கூறினார். இதன் காரணமாக எங்களுக்குள் சண்டை நிலவியது. அதனை தொடர்ந்து ருச்சிஸ்மிதா உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார் என கூறினார். நடிகையின் மர்ம மரணத்துக்கு பின்னணியில் உள்ள காரணங்கள் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.