சென்ற சில வாரங்களுக்கு முன்னதாக கேரளாவில் தந்தையின் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்த போது செல்போன் வெடித்ததில் 8 வயது சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோன்று சென்னை வண்ணாரப் பேட்டையில் செல்போனில் சார்ஜ் செய்துகொண்டே பேசிய இளைஞர் மின்சாரம் தாக்கி கடந்த சில நாட்களுக்கு முன் இறந்தார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் மீண்டுமாக செல்போன் வெடித்து உள்ளது.

அதாவது, ரயில்வே ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் ஹரிஸ் ரகுமான்(23) வழக்கம் போல கோழிக்கோட்டிலுள்ள தன் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று தன் ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறி இருக்கிறது. இதன் காரணமாக ஜீன்சிலும் தீ பிடித்ததால் உடனே தீயை ஹரிஷ் ரகுமான் அணைத்து விட்டார். அதிர்ஷ்டவசமாக இவ்விபத்தில் உயிர்தப்பிய அவருக்கு லேசான தீக்காயங்கள் மட்டும் ஏற்பட்டது. திடீரென்று வெடித்து சிதறிய அந்த செல்போன் 2 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது என ரகுமான் தெரிவித்தார்.