தெலுங்கு நடிகையாக வலம் வரும் ராஷ்மி கவுதம், ஒரு சமூக ஆர்வலரும் கூட. அதோடு ராஷ்மி ஒரு விலங்கு பிரியர் ஆவார். அண்மையில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளார். அதாவது, முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்ட 12 வயது சிறுமியை தவறாக புரிந்துகொண்ட அவரது சகோதரர் அடித்து கொலை செய்துள்ளார்.

சிறுமிக்கு தகாத உறவு உள்ளதாக நினைத்து கொலை செய்து உள்ளார். இதற்கெல்லாம் காரணம் பாலியல் கல்வி இல்லாததால் மட்டுமே என ராஷ்மி கவுதம் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் அடிப்படை விழிப்புணர்வு இல்லாததால் தான் இது போன்ற கொடுமைகள் நடக்கிறது என ராஷ்மி கருத்து தெரிவித்துள்ளார். ராஷ்மி கவுதமின் இப்பதிவு தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.