கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே ஒப்பந்த ஊழியரான ஹரிஷ் ராஜ் (23), தனது அலுவலகத்திற்கு பணிக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் திடீரென வெடித்தது. இதில் அவரது பேண்ட் தீப்பிடித்து எழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி கேரளாவின் திருச்சூர் பகுதியில் மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.