இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சல்மான்கான்  57 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏற்கனவே பல்வேறு நடிகைகளுடன் அவருக்கு காதல் வந்திருந்தாலும் அது திருமணம் வரை செல்லாமல் பாதியிலேயே முறிந்து விட்டது. இப்போது பூஜா ஹெக்டேவும் சல்மான்கானும் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் கிசிகா பாய் கிசிகி ஜான் எனும் இந்தி படத்தில் ஜோடியாக நடித்து உள்ளனர்.

படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாக இந்தி பட உலகினர் பேசி வருகின்றனர். இதுபற்றி சல்மான்கான் பேட்டியில் கூறியதாவது, காதல் எனக்கு ராசியாக இல்லை. அனைத்து நடிகைகளுக்கும் நான் பாய் தான். நான் விரும்பும் பெண் என்னை ஜான் என அழைக்கவேண்டும் என்று விரும்புவேன். எனினும் அவர் கூட என்னை பாய் என்றே அழைக்கிறார். இதனால் நான் என்ன செய்வது” என பதிலளித்து அனைவரையும் சிரிக்க வைத்தார். இதனிடையே சல்மான்கானை காதலிக்கவில்லை என பூஜா ஹெக்டேவும் மறுத்து உள்ளார்.