மத்தியபிரதேசம் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சித்தி மாவட்டத்திலுள்ள கோத்ரா கிராமத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு உள்ளூர்வாசிகளுடன் ஒன்றாக தரையில் அமர்ந்து மதிய விருந்து சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் முதல் மந்திரியுடன் மிக நெருக்கத்தில் அரவிந்த் குப்தா என்பவரும் ஒன்றாக அமர்ந்து மதிய விருந்து சாப்பிட்டுள்ளார்.

இதுகுறித்த போட்டோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இதனிடையே அரவிந்த் குப்தா மோட்டார்சைக்கிளில் இருந்த மரக் கட்டைகளை திருடியதற்காக வனத்துறையால் சென்ற 7-ஆம் தேதி கைது செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு சில தினங்களுக்கு முன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதன்பின் அவர் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து தெரியவந்ததும் அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் யாரும் இதுபற்றி எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.