உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 22 வயது கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிஏ தேர்வு எழுதிவிட்டு வீட்டை நோக்கி சென்றபோது பைக்கில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சட்டகத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக அரசியல்வாதி ஆதிக் அஹமது காவல்துறை முன்பாக நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.