கரூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் பாதை பகுதியில் சமையல்காரரான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று சரவணன் வீட்டிற்கு முன்பு 2 பேர் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது சரவணன் ஏன் இங்கு வைத்து மது குடிக்கிறீர்கள்? என அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த 2 பேரும் கத்தியால் சரவணனை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதில் படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்