மும்பையில் 16 வயது சிறுவன் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, இறந்த சிறுவன் அதிகப்படியான கேமிங் அடிமைத்தனத்திற்கு ஆளாகியிருந்த்தார். இது சிறுவனின் தந்தைக்கு கோவத்தை ஏற்படுத்த கண்டிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில்  நவம்பர் 16 அன்று இது  குறித்து தனது தந்தையுடன் கடும் வாக்குவாதத்தில் சிறுவன் ஈடுபட்டதாகவும், இதன் விளைவாக அவரது செல்போனை தந்தை  பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால்  மனவேதனை அடைந்த சிறுவன், மறுநாள் நவம்பர் 17ஆம் தேதி சமையலறையில் துப்பட்டாவைப் பயன்படுத்தி தகர கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவனைக் காப்பாற்ற அவனது தந்தை முயற்சி செய்த போதிலும், சிறுவன் இறந்துவிட்டதாக மால்வானியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின் காவல்நிலையத்தில்  தகவல் தெரிவிக்கப்பட,  வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.