ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கம்பாளையம் நஞ்சப்பன் நகர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோகுலும் அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர், சூலை மல்லி நகரை சேர்ந்த ஒருவரும் இணைந்து வனத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு தவணைகளாக 3 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கினார்கள்.

ஆனால் கூறியபடி அவர்கள் வேலை வாங்கி கொடுக்கவில்லை . இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டுமே திரும்ப தந்துள்ளனர். மீதமுள்ள 2 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணத்தை தராமல் ஏமாற்றி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.