கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சுத்துகுளம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்டோர் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் எங்கள் பகுதியில் வசித்த இன்பராஜின் மனைவி லட்சுமி தேவி கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஏல சீட்டு நடத்தினார். அவரை நம்பி பல்வேறு தவணைகளாக நாங்கள் 17 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளோம். திடீரென லட்சுமிதேவி வெளியூர் சென்று விட்டார்.

அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் குறித்து கேட்டோம். அதற்கு லட்சுமி எந்த பணமும் யாரிடமும் வசூலிக்கவில்லை. என்னால் பணம் எதுவும் தர முடியாது எனக்கூறி மிரட்டுகிறார். அவரிடம் இருந்து பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அதற்கு புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.