திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தச்சம்பட்டு என்ற கிராமத்தில் எம்.ஜி.ஆர் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் தென்மாத்தூர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ., சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவை சத்யன், கட்சி செய்தி தொடர்பாளர் அனுமோகன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பாக பேசியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாராயணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பேருராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் ஒன்றிய, பேரூராட்சி சார்புஅணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் இன்னாள் உள்ளாட்சி நகராட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் இன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கிளை, வட்ட கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், கழகத்தின் செயல்வீரர்கள், வீராங்கனைகள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.