மெக்சிகோ நாட்டில் இருக்கும் சான்பெத்ரோ ஹுவாமெலுவா நகரத்தின் மேயராக இருப்பவர் ஹியூகோ சாசா. இவர் சமீபத்தில் முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளார். முதலை மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்ததும் அந்த முதலைக்கு மேயர் முத்தம் கொடுத்துள்ளார்.

அந்த நகரத்தில் அதிகம் வசிக்கும் பழங்குடியின மக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்றாக இது இருந்துள்ளது. அதாவது மழை பெய்து இயற்கை செழிக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.