பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 17 வயது கருப்பின சிறுவன் நீல்  போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் நாட்டின் முக்கிய நகரங்களில் வன்முறை பரவ தொடங்கியது. ஐந்து நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல் நடந்து கண்ணீர் புகை குண்டுகள் வீசி  வரும் சமயத்தில் எதுகுறித்தும் கவலைப்படாமல் வாலிபர் ஒருவர் கலவரத்திற்கு நடுவே சாண்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார். இதை அங்கிருந்த எவரோ காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட தற்போது அது வைரலாக பரவி வருகிறது.

வீடியோவை காண