கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் முத்துசாமி காலனியில் இனாமுல் ஹசன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் விற்பனை நிலையத்தில் மார்க்கெட்டிங் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி ஹசன் வேலை காரணமாக பீளமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டிட பணி நடைபெறும் இடத்திற்கு சென்று கட்டிட உரிமையாளரான அருண் என்பவரிடம் மார்க்கெட்டிங் விஷயமாக பேசிவிட்டு ஹசன் திரும்பி வந்துள்ளார்.

அப்போது கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் ஹாலோ பிளாக் கல் எதிர்பாராதவிதமாக ஹசன் தலை மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹசன் பரிதாபமாக உயிரிழந்தார். எனவே கட்டிட ஒப்பந்ததாரர் ரஞ்சித், கட்டிட உரிமையாளர் அருண் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.