தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் சாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இந்நிலையில் பல்லக்கில் பெருமாள் சிலையை எடுத்து வந்த போது எதிர்பாராதவிதமாக சிலை தலைகீழாக கவிழ்ந்தது. இதனை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து பெருமாள் சிலையை தூக்கி பல்லக்கில் வைத்து மீண்டும் வலம் வந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. உற்சவர் சிலையை சரியாக கட்டாமல் விட்டதாலேயே கீழே விழுந்து விட்டதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.