சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் சித்தர் முத்து வடுகநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சித்தர் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமியை தரிசனம் செய்தனர். இதேபோல வெட்டையன்பட்டியில் இருக்கும் காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அன்ன வாகனத்தில் அருள் பாலித்த அம்மனை தரிசித்து பக்தர்கள் பரவசமடைந்தனர்.