திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சாதமங்கலம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் உதவியாளராக தற்காலிக ஊதியத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர்.

இதனையடுத்து மாலை வீட்டிற்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு கணவன், மனைவி இருவரும் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 1  லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை, லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உமாமகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.