கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் நான்கு ரோடு அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கடையில் போலீசார் சோதனை நடத்தியதில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக கடை உரிமையாளரான சரஸ்வதியை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.