தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான எறிபந்து போட்டியானது திருச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கமாக் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

இதில் கமாக் பள்ளி மாணவர்கள் 2-வது இடத்தை வென்று சாதனை படைத்தனர். பின் இப்போட்டியில்  வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் ராதா ராஜேசுவரி, உடற்கல்வி ஆசிரியர் இசக்கிதுரை மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் பாராட்டினர்.