திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வாழவச்சனூர் பகுதியில் தணிகாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வர்ஷா தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வேலை செய்யாமல் செல்போனில் படம் பார்த்து கொண்டிருந்த வர்ஷாவை அவரது தாய் கண்டித்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த வர்ஷா விஷம் குடித்துவிட்டு தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வர்ஷாவின் தாய் தனது மகளை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வர்ஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.