சதீஸ் கரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக மாவட்ட துணை தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அண்மையில் அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை மாவோயிஸ்டுகள் எச்சரித்தனர். இதனால் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தூபே கொல்லப்பட்டதற்கு மாவோயிஸ்டுகளே காரணம் என கூறப்படுகிறது. சத்தீஸ்கரில் தேர்தலுக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.