கோவையில் இருந்து செங்கல்பாரம் ஏற்றி வந்தலாரி புட்டுவிக்கி ரோட்டில் சிறிய பாலம் அருகே சென்றபோது முன்பக்க சக்கரங்கள் புதிதாக போடப்பட்ட சாலைக்குள் புகுந்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த டிரைவர் லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். அந்த வழியாக வேறு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராட்சத கிரேன் மூலம் நடுரோட்டில் புதைந்து கிடந்த சரக்கு லாரியை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.