கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 29-ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதனை ஈடு செய்ய வருகிற செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அதே சமயம் வருகிற 29-ஆம் தேதி அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட பணிகளை கவனிக்கும் பொருட்டு தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.