சென்னை மாவட்டத்தில் உள்ள மாடவாக்கம் பகுதியில் விக்டர்(43)- ஜூலியட்(42) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஜென்சி(15), கேத்தரின் (12) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விக்டர் தனது மனைவி மற்றும் மகளுடன் கோவையில் இருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நசியனூர் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி கோவை-சேலம் செல்லும் சாலையை நோக்கி பாய்ந்தது.

அப்போது சேலம் நோக்கி சென்ற டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜூலியட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விக்டர், ஜென்சி, கேத்தரின் ஆகிய மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் வீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.