கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நுள்ளிவிளை பகுதியில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்திய பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அபிஷேக் என்ற மகனும், அஸ்மிதா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் அஸ்மிதா 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு நர்சிங் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அஸ்மிதா தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த அஸ்மிதா தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்மிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.