சென்னையில் பில்டர் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆறு புள்ளி 50 லட்சம் முதல் 7.50 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் கடனில் 3.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக பாரம்பரியமான பில்டர் காபி நிலையம் அமைப்பதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவதற்கு ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த தொழிலை தொடங்குவதற்கு காலியிடம் அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு கடன் வழங்கப்படும். 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவதற்கு புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com  என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.