தொழில் மூலம் பொருளாதார ரீதியாக தங்களை நிலைப்படுத்த விரும்பும் பெண்களுக்காக சென்ட் கல்யாணி என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பத்து லட்சம் ரூபாய் வரை ஆண்டிற்கு 9.95 சதவீதம் வட்டியுடன் கடன் பெறலாம். அதுவே பத்து லட்சம் ரூபாய்க்கு மேலான கடனுக்கு 10.20 சதவீத வட்டியாகும் . இணை பாதுகாப்பு அல்லது உத்திரவாதம் இல்லாமல் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி இந்த கடனை வழங்குகின்றது. இதில் ஆர்வமுள்ள பெண்கள் https://centralbankofindia.co.in/en என்ற இணையதளம் மூலமாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.