கல்வி கற்பதில் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து புரட்சி செய்த கேரளாவை சேர்ந்த மூதாட்டி கார்த்தியாயினி(101) காலமானார். முதியோர் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படும் அக்ஷரா லக்ஷம் திட்டத்தில் கல்வி கற்ற மிகவும் வயதானவர் என்ற பெருமையை பெற்றவர். கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். 101 வயதில் காலமான இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.