திமுகவின் துரோகத்தை கண்டித்து அக்டோபர் 16-இல் கும்பகோணம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் என அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் காவேரியில் நீர் திறக்கப்படவில்லை. கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் கண்துடைப்பு தீர்மானத்தை தமிழக அரசு கொண்டு வந்தது . விவசாயிகள் மீதோ, தமிழக மக்கள் மீதோ திமுகவுக்கு எந்த அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை. விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிப்பதாக கூறி அக்டோபர் 16 பாஜக உண்ணாவிரதம் எனவும் தெரிவித்துள்ளார்.