தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவர கொண்டா நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைக்கர் என்ற திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இந்த திரைப்படத்தால் தியேட்டர் அதிபர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் தெலுங்கானா தியேட்டர் அதிபர்கள் ஹைதராபாத் திரைப்பட வர்த்தக சபை முன்பாக லைக்கர் படத்திற்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது லைக்கர் பட தோல்விக்கான நஷ்ட ஈடை பூரி ஜெகன்நாத் 6 மாதத்தில் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை அவர் நஷ்ட ஈடு கொடுக்கவில்லை. மேலும் இதன் காரணமாக தான் உடனடியாக தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தியேட்டர் அதிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.