தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த அபிராமி திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகினார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை அபிராமி மீண்டும் நடிப்பதற்கு வந்துள்ளார். நடிகை அபிராமி ராகுல் என்பவரை திருமணம் செய்த நிலையில் கடந்த வருடம் கல்கி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்த தகவலை நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை அபிராமி தன் வலைதள பக்கத்தில் தெரிவித்து இருந்தார். மேலும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்த பிறகு எங்களுடைய வாழ்க்கை அழகாக மாறியது என்றும் அபிராமி தெரிவித்துள்ளார்.