கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியகாரம்பாளையம் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கௌசல்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதே சமயம் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த கௌசல்யாவின் அண்ணன் தனது தங்கை தூக்கில் தொங்குவதை பார்த்த அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு கௌசல்யாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் கௌசல்யா தனது தாய்க்கு அனுப்பிய வீடியோவை கைப்பற்றினார். அந்த வீடியோவில் எனக்கு வாழ பிடிக்கவில்லை என்பதால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கௌசல்யா கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.