கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடகீரனூர் கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமூர்த்தி என்ற மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமூர்த்திக்கு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக திருமூர்த்தி, அவரது தாய் அங்கம்மாள், தந்தை சின்னசாமி, உறவினர்களான சசிகுமார், செவ்வந்தி, சண்முகம் ஆகியோர் சங்கீதாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து சங்கீதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் திருமூர்த்தி உட்பட 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.