கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் தெற்கு தெருவில் ஜேசுராயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் தான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் விஜயா சிரமப்பட்டு வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.