சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் அசோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மகன்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த நாகேஸ்வரி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகேஸ்வரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.