கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னையராஜபுரத்தில் நஞ்சப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமாத்தாள்(72) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகிலா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கோகிலா தனது கணவர் கண்ணன், மகன் மோனிஷ் ஆகியோருடன் இணைந்து தனது தாயிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். ஆனால் ராமாத்தாள் தன்னிடம் பணம் இல்லை என கூறினார்.

இதனால் கோபமடைந்த கோகிலா தனது கணவர் மற்றும் மகனுடன் இணைந்து தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கோகிலா உள்பட மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.