கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகா(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சித்ரேஸ்(6) என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கனகா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த செல்லப்பன் தனது மனைவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி கனகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட கனகா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிறு வலி குறையவில்லை. இதனால் கனகா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.