பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புலியூரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் அருகே கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தரமணியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் வந்தது. அதனை சரி செய்யும் பணியில் கடந்த 2 நாட்களாக பழனிச்சாமி ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் 9 அடி ஆழத்தில் இறங்கி பள்ளத்தில் இருந்த கழிவுநீரை அகற்றும் மோட்டாரை கயிறு மூலம் மேலே தூக்கி போது மின்சாரம் தாங்கி பழனிசாமி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பழனிச்சாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பழனிசாமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா? அல்லது விஷவாயு தாக்கி இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.