திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் மருதமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மருதமுத்து தனது தாய் வீர முத்துலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் ரங்கநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வேடசந்தூர் கருகாம்பட்டி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த வீர முத்துலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.