தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவின் படி அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரூர் அருகே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 11 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 200-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.