திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ராஜாகுளம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிமாநிலங்களுக்கு செல்லும் டிப்பர் லாரிகளை ஒட்டி வந்தார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நான்கு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன் தனது மனைவியுடன் தகராறு செய்தார். சம்பவம் நடைபெற்ற அன்று மது குடிக்க பணம் கேட்டு ராஜேந்திரன் தனது மனைவியை மிரட்டியுள்ளார்.

மேலும் கடப்பாரையால் தனது மனைவியை தாக்க முயன்றார். அப்போது தன்னை தற்காத்துக் கொள்வதற்காக பாண்டீஸ்வரி கடப்பாரை பிடுங்கி தனது கணவரை தாக்கினார். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து அறிந்து போலீசார் அங்கு சென்று ராஜேந்திரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.